இன்றைய வானுயர் கட்டடங்களைப் பார்க்கும்போது,ஒரு பக்கம் மனதில் மகிழ்வு தோன்றினாலும்,
மறுபுறம் அதனடியில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நெஞ்சைப் பதைக்க வைக்கின்றன.சில பத்தாண்டுகளுக்கு முன் இருந்த விவசாய நிலங்களில் 60%க்கும் அதிகமானவை வீட்டு நிலங்களாக மாறிவிட்டன.பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு உப தொழில்களைத் தேட ஆரம்பித்து விட்டனர்.அதற்கான மிகப் பெரும் காரணம் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை,விளை பொருட்களை சேமிப்பதில் இருக்கும் பிரச்சினைகள்,நிலத்தை வீட்டு மனையாக்குவதால் கிடைக்கும் பெரும் லாபம்.விவசாயிகள் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது வீட்டு நிலன்களாக்குவது பயன் தரும் செயல் தான்.ஆனால் ஒரு சமுதாயத்தின்,ஒரு நாட்டின் எதிர்காலம் இச்செயல் மூலம் பாழாகிறது.தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.இதே நிலை நீடித்தால், நம் தாய்த்திரு நாட்டிற்கே உணவுப் பஞ்சம் வரும் என்பது திண்ணம்.இதை எல்லாம் சரி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும்,அரசு ஏதும் செய்யவில்லை என்
ரும் குறை கூறுவது மட்டும் தீர்வாகாது.இதிலிருந்து தப்பிக்க நாம் வழிகளைக் கண்டாக வேண்டும்.சில மாற்றங்களைக் கொண்டுவருவதால் மிகப் பெரும் பசுமைப் புரட்சியைக் கொண்டு வரலாம்.
1.நிலத்தில் போட்டால் அழியாது எனக்கூறி ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி தரிசாகப் போட்டு,அதனை ஒரு முதலீடாக்கும் எண்ணத்தைக் குறைக்க வேண்டும்.
2.சம்பாதிக்கும் நகர இளைஞ்ர்கள் விவசாயிகளுக்கு உதவ முன் வர வேண்டும்.அவர்களால் உடல் உழைப்பைத் தர முடியாவிட்டாலும்,கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் பொருளாதார உதவிகளைச் செய்ய முன்வரலாம்.
3.விவசாய வேலை செய்பவர்கள், குறைந்தவிட்ட காரணத்தால் விவசாயிகள் எந்திரங்களின் உதவியை நாடும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
4.உழவர் சந்தை போன்ற அமைப்புகளை,குடியிருப்பு சங்கங்கள் அருகிலுள்ள கிராம விவசாயிகளின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்த முனையலாம்.சிறந்த பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதோடு,விவசாயிகளுக்கும் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கும்
5.நவீன விவசாய உத்திகளை விவசாயிகளுக்கு கற்றுத் தருவதன் மூலம் குறைந்த செலவில், நிறைந்த மகசூலையும்,லாபத்தையும் பெறலாம்.
அடுத்த தலைமுறைக்கு அன்னை பூமியை அளிக்கப் போகிறோமா அல்லது வெறும் மண்ணைத் தரப் போகிறோமா என முடிவு செய்வது நம் கையில்தான் உள்ளது
3 comments:
உண்மைதான்.. அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? மாசடைந்த சுற்றுசூழல் , உணவுப் பற்றாக்குறை நீரில்லா நிலை இவை தரப் போகிறோமா ? இல்லை நல்ல வளமான பூமியை தரப் போகிறோமா ??
நல்ல பகிர்வு
@LK
நன்றிங்க.இந்நிலை மாற வேண்டும் என்பதே என் ஏக்கம்
நல்ல பதிவுங்க.
Post a Comment