Saturday, November 6, 2010

புதிய சிறகுகள்-விமர்சனம்

அண்மையில் படித்த ராஜம் கிருஷ்ணனின் "புதிய சிறகுகள்" சிறுகதையை உங்களிடையே பகிர்ந்து கொள்ளத் தூண்டியது.
இரு தலைமுறைப் பெண்களின் வாழ்வியல் கோட்பாடுகளை அருமையாகச் சொல்லும் கதை.கடந்த தலைமுறை தாயான அபிராமியின் வாழ்வியல் அணுகுமுறைகள்,மகன் மீதான பாசம்,சமுதாயத்தின் சொல்லுக்கு அஞ்சும் பயம் போன்றவையும்,இத்தலைமுறைப் பெண்ணான சுபாவின் தெளிவான எண்ணங்கள்,செயல்கள்,முடிவெடுக்கும் பாங்கு போன்றவை அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.அடுத்தவர் வாழ்க்கையில் அவல் தேடும் சுற்றுப்புற மக்கள்,அதே மக்கள் அவசர காலங்களில் செய்யும் உதவி இவையெல்லாம் ஒரு நடுத்தர குடும்ப வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.குடும்ப மானத்தைக் காப்பதாய் நினைத்து செய்யும் சில செயல்கள் வாழ்க்கையையே தடம் புரள வைக்கும் என்ப‌தும்,தேவைப்பட்டால் வெட்டி விடவும்,வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக இருக்க வேண்டும் என்பதை திண்ணமாக உணர்த்துகிறது கதை.கதை சொல்லப்பட்ட பாங்கு காட்சிகளை கண்முன் விரிக்கிறது.இதே போன்ற குணநலன் கொண்ட நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மக்கள் நம்மை அறியாமலேயே கதைக்குள் வந்து அமர்ந்து கொள்கிறன்றனர். ‌கதையின் இறுதியிலாவது சீனி திருந்த மாட்டானா என்ற எதிர்பார்ப்பை வளர்த்திக்க் கொண்டே இருக்கிறது.ஆனால் அத்தகைய முடிவு இருந்தால் அது சினிமாத்தனமானதாகத் தான் இருந்திருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.தகுதிக்கும் மீறி குருட்டுச் செல்லமாய் வளர்க்கப்படும் பிள்ளைகள் எக்காலத்திலும் திருந்துவதில்லை என்பதை புடம் போட்டு விளக்குகிறது.அருமையான கதை.

கதையைப் படிக்க வேண்டுமா. இங்கே கிளிக் பண்ணுங்க‌

2 comments:

எல் கே said...

நல்ல விமர்சனம். கதையை படிக்க தூண்டுகிறீர்கள் ..please remove word verification and use moderation in that place

கவின் இசை said...

@ LK


நிச்சயமாப் படியுங்க. நல்ல கதை