Thursday, November 11, 2010

சிறந்தென்ன இருக்கிறது ?




அந்தி மாலை
ஆண்டுகள் கடந்த சந்திப்பு
இனிக்கும் புன்னகை
துவ‌ளும் சொற்க‌ள்
க‌ண்க‌ளின் க‌ள்ள‌த்த‌னம்
சொல்பேசா ச‌ம்ம‌த‌ம்
ம‌ல‌ரும் ம‌ன‌ம்
தோள் சேர்ந்த‌ மல‌ர்க‌ள்
இணை சேர்ந்த விரல்கள்
உன் மேல் ததும்பி வரும்
காதலினும் சிறந்தென்ன
இருக்கிறது எவ்வுலகிலும்?

.

2 comments:

எல் கே said...

பிரிவின் பிறகு சந்திக்கும் நேரம் மிக அழகிய நேரம். கவிதை அருமை வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

உண்மை... காதல் போல மகிழ்ச்சியும் இல்லை வலியும் இல்லை